கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100ஐ எட்டும் தூர்த்தில் உள்ளன. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி தலைவர் ராஜா உசேன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை வைத்தியர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இசாக் வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம் மாவட்ட செயலாளர்கள் முகமது இப்ராகிம் அப்பாஸ் மண்டல செயலாளர் முஸ்தபா மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹீம் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவூப் நிஸ்தார் மாவட்ட தொழிற் சங்க துணை தலைவர் அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு செய்தியாளர் மன்சூர்

Share to your friends.