கோவை. ஜூன்.1- திமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய மனைவியினுடைய நடவடிக்கைகள் சரி இல்லை அதனால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து வருகிறார் என நடிகை சாந்தினி கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாளுக்கு நாள் ஒவ்வொரு தகவலாக நடிகையை வெளியிட போலீசார் அதிர்ந்து போயுள்ளன பெண்களுக்கு ஏற்படக் கூடிய அந்த நாட்களிலும் கட்டாய உடலுறவில் ஈடுபட்டதாக நடிகை கதறி கூறியுள்ளார். போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னார்.
அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் கைது உறுதியானதால் அமைச்சர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மீது நடிகை சாந்தினி அடுத்தடுத்து பரபரப்பு தகவலை வெளியிட்டு வருகிறார். மாதவிடாய் காலத்திலும் கூட மணிகண்டன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் அவர் கூறியுள்ளார்.
