தடுப்பூசி செலுத்தவந்த கோவையை சேர்ந்த ஒரு தம்பதியினர் கொரானோ நோயாளிகள் மின்விசிறி இல்லாமல் படும் கஷ்டத்தை பார்த்து தங்களுடைய நகைகளை அடமானம் வைத்து மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மின்விசிறிகளை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் அதே பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.இவர்கள் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி போட சென்றுள்ளனர். அங்கு உள்ள நோயாளிகளின் மின்விசிறி இல்லாமல் படும் கஷ்டத்தை பார்த்து தங்களுடைய நகைகளை இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து நூறு மின்விசிறிகளை வாங்கிவந்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் இடம் வழங்கினார்கள். ஆனால் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் இவ்வளவு மின்விசிறிகள் வேண்டாம், பாதியை எடுத்துக் கொண்டு உங்களுடைய நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.ஆனாலும் நோயாளிகளுக்காக வாங்கி வந்தது இதை திரும்ப எடுத்துச் செல்ல மாட்டோம் என்று கூறினார்கள். தங்களது பெயர் விவரங்களையும் கூற மறுத்துவிட்டார்கள். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்.இதை தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த அனைத்து மின்விசிறி களையும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நோயாளிகளுக்காக கொடுத்து விட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.